Saturday 7 November 2015

அறைந்து வருடுகிறாய்..

சன்னலைத் திறக்கிறேன்..
காத்திருக்க வைத்ததற்காய்
என்
முகத்தில் அறைந்துவிட்டு

வரைகிறேன் உன்னை....

மெல்லிய கோடுகளால்
மென்மையாக
வரைந்து கொண்டிருக்கிறேன்
உன் உருவத்தை..

Friday 6 November 2015

துளி ரத்தம்

ஊசி குத்தியதால்
துளிர்த்த
ஒருதுளி ரத்தத்தை
உறைந்து போகும்முன்
உன்னிடம் காட்ட ஓடி வந்தால்..
அகல விரிக்கப்பட்ட உன்
உள்ளங்கைகளில் அறைந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்
ஆணிகளை.....
நடுங்கும் கரங்களால்
பிடுங்குகிறேன் ஆணிகளை...
கசியும் ரத்தத்தை

Friday 25 September 2015

சன்னலோர இருக்கை

ஒடும் பேருந்தில்
சன்னலோர இருக்கைக்கு
அடம் பிடிக்கும் நான்
இப்போதெல்லாம்  தாராளமாய்
விட்டுத்தருகிறேன்
மகளுக்கு....
வரிசையாய் ஓடும்

Friday 18 September 2015

பூங்கொத்து

எங்கள் தலைகளைக் கொய்து
நேர்த்தியாய் அடுக்கி
பிரியமானவர்களுக்கு
பரிசளிக்கிறீர்களே 

Thursday 17 September 2015

அடம்

அடம் பிடிக்கும் குழந்தையாய்
விடாமல் பெய்கிறது மழை..
 நான்
 நனைந்தே ஆகவேண்டுமாம்.

Monday 14 September 2015

மீண்டும் மழை

மழையில் நனையும்  ஆசை
மறுக்கப்பட்ட குழந்தை
ரகசியம் பேசுகிறது
மரத்திடம்...