Friday 6 November 2015

துளி ரத்தம்

ஊசி குத்தியதால்
துளிர்த்த
ஒருதுளி ரத்தத்தை
உறைந்து போகும்முன்
உன்னிடம் காட்ட ஓடி வந்தால்..
அகல விரிக்கப்பட்ட உன்
உள்ளங்கைகளில் அறைந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்
ஆணிகளை.....
நடுங்கும் கரங்களால்
பிடுங்குகிறேன் ஆணிகளை...
கசியும் ரத்தத்தை
துடைக்க துடைக்க
காணாமல் போயிருந்தது
என் துளி ரத்தம்.

2 comments: